தேசிய செய்திகள்

பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்களுக்கு வேலை

ரெயில்வேயில் பணியாற்றி 65 வயது மிகாதவர்களை பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நீராவி என்ஜின்கள், பாரம்பரிய ரெயில் பெட்டிகள், நீராவி கிரேன்கள், நிலைய உபகரணங்கள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்கவும், புதுப்பிக்கவும் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு தினசரி சம்பளம் ரூ.1,200 ஆகும்.

இதுபற்றி மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த பணியில் அமர்த்தப்படுகிற ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வேயின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், பழுதுகளை சரி பார்க்கவும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு அவர்கள் பயிற்சியாளர்களாகவும் திகழ வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரெயில்வே வாரியம் தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை