தேசிய செய்திகள்

பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் பொருளாதார மந்தநிலை நீடித்து வரும் நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை (6.9 சதவீதம்) விட குறைவாக, அதாவது 6.1 சதவீதமாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பொருளாதாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், உள்நாட்டு உற்பத்தி விகித மதிப்பீட்டை ரிசர்வ் வங்கி கணிசமாக குறைத்து உள்ளது. ஆனால் இந்த உண்மை நிலையை மறைக்க மத்திய அரசு நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் இனியும் இதை மறைக்க முடியாது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் இவ்வாறு அழிவுறுவதை அனுமதிக்க முடியாது என்று காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை