தேசிய செய்திகள்

கடலோர மாவட்டங்களுக்கு "மஞ்சள் அலர்ட்" ; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கடலோர மாவட்டங்களுக்கு வருகிற 18-ந் தேதி வரை "மஞ்சள் அலர்ட்" என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

மங்களூரு;

கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைநகர் பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பலபகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த மழைக்கு 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைவு படுத்த கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் வருகிற 18-ந் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தரகன்னடாவில் வருகிற 18-ந் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் பலபகுதிகளில் கனமழைக்கும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்