தேசிய செய்திகள்

21-ந் தேதி காஷ்மீரில் யோகா தின நிகழ்ச்சி; பிரதமர் மோடி பங்கேற்கிறார்

ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்ரீநகர்,

பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 10-வது சர்வதேச யோகா தினம், வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீரை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.

3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக காஷ்மீர் செல்கிறார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...