தேசிய செய்திகள்

நதி தூய்மையாக இல்லை என தெரிந்ததால் யோகி ஆதித்யநாத் கங்கையில் குளிக்கவில்லை - அகிலேஷ்

எந்த நதியும் தூய்மையாக இல்லை என தெரிந்ததால் யோகி ஆதித்யநாத் கங்கையில் குளிக்கவில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி கங்கை நதியில் நீராடினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

இந்நிலையில், எந்த நதியும் தூய்மையாக இல்லை என தெரிந்ததால் யோகி ஆதித்யநாத் கங்கையில் குளிக்கவில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அகிலேஷ் கூறுகையில், எந்த நதியும் தூய்மையாக இல்லை என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு தெரியும். ஆகையில், வாரணாசியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கங்கை நதியில் மூழ்கி குளிக்க வேண்டாம் என யோகி ஆதித்யநாத் முடிவெடுத்தார். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், உத்தரபிரதேச மக்களை சமாதானப்படுத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்