தேசிய செய்திகள்

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞன்

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் ராஸ்ரா என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார்.

இது குறித்து அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பெயரில் கடந்த மாதம் 16-ம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த புகாரில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த இளைஞன் கடத்தி சென்றுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனை தொடர்ந்து காணாமல் போன சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் இளைஞனின் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளைஞனை கைது செய்தனர். மேலும், கடத்தப்பட்ட சிறுமியையும் போலீசார் மீட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த இளைஞனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்