தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசிக்கான நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை, அனைத்து மாநிலங்களிலும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த செய்தி ஒன்றை, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தியில், மத்திய பட்ஜெட்டில் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்ட 35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.4,417 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தியை பகிர்ந்து, கொரோனா தடுப்பூசி நிதி குறைவாக பயன்படுத்தப்படுகிறது, மனித உயிர் குறைத்து மதிப்பிடப்படுகிறது ஆனால் பிரதமரின் சுயபெருமை மட்டும் அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு