கோப்புப்படம் 
செய்திகள்

இந்தோனேசியா: பாலி தீவிலிருந்து விமானபோக்குவரத்து மீண்டும் தொடக்கம்

இந்தோனேசியாவில் பாலி தீவிலிருந்து அக்டோபர் 14 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.

தினத்தந்தி

ஜகார்த்தா,

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் பாலி தீவில் உள்ள விமான நிலையத்தில் மீண்டும் திறக்க இந்தோனேசியா அரசு திட்டமிட்டுள்ளது.

உலகின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் கொரோனா தொற்றானது ஜூலை மாதத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்யும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் எட்டு நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து