செய்திகள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பிளஸ்-2 தேர்வை 46 பேர் எழுதுகின்றனர் அதிகாரிகள் தகவல்

வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பிளஸ்-2 தேர்வை 46 பேர் எழுதுகின்றனர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

வேலூர்,

தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 38,457 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 33,619 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 87.42 சதவீதம் ஆகும்.

கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 24-ந் தேதியன்று நடந்த வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய தேர்வுகளை சில மாணவர்கள், தனித்தேர்வர்கள் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கு வருகிற 27-ந் தேதி மறுதேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

விடுபட்ட பிளஸ்-2 தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 5 மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் 41 பேர் என்று மொத்தம் 46 பேர் தேர்வு எழுதவற்காக ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து உள்ளனர். இவர்களுக்காக 13 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது