செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்த நாராயணசாமி - பிரதமர் மோடி பாராட்டு

கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்த நாராயணசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்ததுடன், டுவிட்டரில் படத்தொகுப்பையும் வெளியிட்டார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

பிரதமர் மோடியின் மனதில் உதித்த திட்டங்களில் முக்கியத்துவம் பெற்ற திட்டம், தூய்மை இந்தியா திட்டம்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் இந்த திட்டத்தை முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். அப்போது அவர் வேட்டியை மடித்துக்கொண்டு கொஞ்சமும் தயக்கமின்றி, கழிவுநீர் கால்வாயில் இறங்கி மண்வெட்டியால் வெட்டி சுத்தம் செய்தது ஊடகங்களில் படத்துடன் வெளியானது. பல தரப்பினரின் பாராட்டையும் பெற்றது.

இதைப் பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்ட தவறவில்லை.

இது தொடர்பான படத்தொகுப்பை அவர் டுவிட்டரில் வெளியிட்டு அதில், நாராயணசாமி அவர்களே, நீங்கள் முன்னணியில் நின்று வழிநடத்தி மற்றவர்களுக்கு உத்வேகம் தந்து, இந்தியாவை தூய்மைப்படுத்தும் இயக்கத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள் என கூறி உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்