செய்திகள்

கடையம் அருகே விசாரணைக்கு சென்ற விவசாயி சாவு: வனத்துறை ஊழியர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்

கடையம் அருகே விசாரணைக்கு சென்ற விவசாயி உயிரிழந்ததை தொடர்ந்து, வனத்துறை ஊழியர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். மேலும், விவசாயியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயியான இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கடையம் வனத்துறையினர் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அணைக்கரை முத்துவின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாகைக்குளத்தில் உள்ள அணைக்கரை முத்துவின் வீட்டின் முன்பு உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அம்பை மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயன் நேற்று காலை 11.30 மணி அளவில் கடையம் சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். சம்பவத்தன்று அந்த வனத்துறை அலுவலகத்தில் அணைக்கரை முத்துவிடம் விசாரணை மேற்கொண்ட வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்களை வரவழைத்து, அவர்களிடம் மாஜிஸ்திரேட்டு தனித்தனியாக விசாரித்து, வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

மேலும், அங்கு மின்வாரிய ஊழியர்களையும் வரவழைத்து விசாரித்தார். இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.

இதற்கிடையே, தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் நேற்று வாகைக்குளத்தில் உள்ள அணைக்கரை முத்துவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, அரசு வேலைவாய்ப்பும் அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது அணைக்கரை முத்துவின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட வனத்துறையினர் 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தால்தான், உடலை பெற்று சென்று இறுதிச்சடங்கு நடத்துவதாக தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை