செய்திகள்

நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

அண்ணா நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாவின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்லத்துரை தலைமையிலும், நகர செயலாளர் பாஸ்கர் முன்னிலையிலும் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதைப்போல தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி தலைமையில், கட்சி நிர்வாகிகள் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.ம.மு.க. நகர செயலாளர் வீரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் அறந்தாங்கியில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில், வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம் முன்னிலையில் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து ஊர்வலமாக கட்சியினர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...