அரசியல் களம்

விஜய் வெறும் ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலுக்கு வரவில்லை- அருண்ராஜ்

வரும் தேர்தலில் தவெக-வின் பலம் என்ன என்பதை மக்கள் உலகுக்கு உணர்த்துவார்கள் என்று தவெக நிர்வாகி அருண்ராஜ் கூறினார்

தவெக நிர்வாகி அருண்ராஜ் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது:

விஜய் வெறும் ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. மக்களின் பேராதரவுடன்தான் களத்திற்கு வந்துள்ளார். ஊழல் சக்திகளுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பதைதான் மக்கள் விரும்புகிறார்கள்.

வரும் தேர்தலில் தவெக-வின் பலம் என்ன என்பதை மக்கள் உலகுக்கு உணர்த்துவார்கள் . ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் கொள்கை முடிவு. ஊழல் சக்தியுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். கூட்டணி கட்சிகள் வரும் என்ற நம்பிக்கையில் விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சுனேத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு

மத்திய பட்ஜெட்; முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படுமா?

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்