செய்திகள்

இந்தியாவில் கொரோனா பரிசோதனையை குறைத்து, மரணத்தை மறைக்கிறது மத்திய அரசு - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா பரிசோதனையை குறைத்து, மரணத்தை மறைக்கிறது மத்திய அரசு என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. இந்தியாவில் மராட்டியம், டெல்லி, தமிழகம், கர்நாடக போன்ற மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதை தவிர்த்து பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618 ஆக உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரிசோதனையை குறைத்து, கொரோனா பாதிப்பால் எற்படும் மரணத்தை மத்திய அரசு மறைக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த மாயை விரைவில் உடையும், இந்தியா அதற்கான விலையை கொடுக்கும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்