ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று சேவைகளை உள்ளடக்கிய ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பு (ஏ.எப்.எம்.எஸ்) மூலம் மருத்துவ அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்கள் (180), பெண்கள் (20) என மொத்தம் 200 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் எம்.பி.பி.எஸ்., முதுகலை டிப்ளமோ, பட்ட மேற்படிப்பு என மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடித்திருக்க வேண்டும். 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வும் உண்டு.
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். http://www.amcsscentry.gov.in/ என்ற இணைய பக்கத்தில் விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-11-2021.