சிறப்புக் கட்டுரைகள்

பாலியல் வழக்குகள்: குற்றவாளியை எளிதில் கண்டறிய உதவும் மரபணு பரிசோதனை... ஓர் அலசல் பார்வை!

பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய, நிரபராதிகளை காக்க மரபணு பரிசோதனை பெரிதும் உதவுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் விஷம் ஏறுவது போல், பாலியல் வன்கொடுமை வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவது என்பது போலீசாருக்கு கடுமையான சவாலான ஒன்றாகவே உள்ளது.

இதில், சில நிரபராதிகளும் போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் சிக்கி விடுகின்றனர். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என நிரூபிப்பதற்கும், உண்மையான குற்றவாளிகளை அறிவதற்கும், போலீசாரின் விசாரணையுடன் பல்வேறு நவீன தொழில் நுட்பங்களும் உதவுகின்றன.

அவற்றில் மரபணு பரிசோதனை பெரும் பங்கு வகிக்கிறது. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் கூறும்போது, பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைகள் ஆகிய வழக்குகளில் இந்தியாவில் உள்ள பல நீதிமன்றங்கள் வலுவான மற்றும் திறன் வாய்ந்த தீர்ப்புகளை தற்போது உடனுக்குடன் வழங்க முடிகிறது.

துல்லிய தன்மை கொண்ட மரபணு சான்றுகளின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் கூட இதுபோன்ற தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்குகின்றனர்.

இந்த மரபணு சான்றின் உதவியுடனேயே, 16 வயது சிறுமி குடியாவின் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு கூட தீர்வு காணப்பட்டது. வருங்கால விசாரணைகளுக்கு இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும்.

குடியா வழக்கில் சி.பி.ஐ. சேகரித்த மதுபான பாட்டில்கள், உயிரணு மாதிரிகள், ரத்த மாதிரிகள், சம்பவ பகுதியில் கிடைத்த களிமண் மற்றும் அதுபோன்ற பிற சான்றுகளும் வழக்குக்கு பயன்பட்டன.

இதுபோன்ற வழக்குகளில் மரபணு சான்று தீர்ப்புகளை கட்டமைப்பதற்கு அதிகம் உதவுகிறது. அதனால், குற்ற புலனாய்வில் பல நாடுகளில் இந்த பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை 70 நாடுகள் மரபணு தரவுகளை சேகரித்து வைக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தி உள்ளன. இதனால், குற்றங்கள் மீண்டும் நடைபெறுவது கட்டுப்படுத்தப்பட உதவுகிறது.

எனினும், முடி, துணிகள், காண்டம்கள் உள்ளிட்ட சான்றுகளின் முறையான சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிலும் நன்றாக பயிற்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகிறது என தடயவியல் ஆய்வக உதவி இயக்குனரான மருத்துவர் விவேக் சஹஜ்பால் கூறுகிறார்.

குடியா வழக்கானது, தடயவியல் மரபணு தொழில்நுட்பத்தின் உண்மையான ஆற்றலை விளக்கும் வகையில் அமைந்தது. இந்த வழக்கில், சி.பி.ஐ. அமைப்பின் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் மரபணு, குற்ற சம்பவ பகுதியில் கிடைத்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் இருந்து கிடைத்த மரபணுவுடன் ஒத்து போகவில்லை.

இதனால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின்னர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை விசாரித்து 250 பேரிடம் இருந்து மரபணுக்கள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.

இதில் ஒரு மரபணு மாதிரி குற்றவாளியின் தாயாரின் மரபணுவுடன் ஒத்து போனது. இதனால், உண்மையான குற்றவாளியின் அடையாளம் தெரிய வந்தது. தொடர் விசாரணையில், அந்த நபர் தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

சர்வதேச குற்ற நீதி முறையில் மரபணு தடயவியல் பரிசோதனையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரிய உறுதுணையாக அமைந்துள்ளது. விசாரணையை முன்னெடுத்து செல்வதிலும், உண்மையான குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும், சந்தேக நபர்கள் அல்லது தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்களை பிரித்து அறியவும் ஒரு வழியை காட்டுகிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு