சிறப்புக் கட்டுரைகள்

வெற்றிலையின் மகிமை

வெற்றிலை, மருத்துவ குணம் கொண்ட பொருள் மட்டுமல்ல, மங்களகரமானதும் கூட. நம் நாட்டை பொறுத்தவரை வெற்றிலை இல்லாமல் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை. எல்லா நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இடம் பிடிப்பது வெற்றிலைதான்.

சங்க கால நூல்களிலும் வெற்றிலையின் சிறப்புகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கலிங்கத்து பரணி, கம்பராமா யணம் என வெற்றிலை இடம்பெற்றிருக்கும் நூல்களின் பட்டியல் வெகு நீளம்.அக்கால மக்களின் ஆரோக்கிய உணவில் வெற்றிலையும் அடங்கும். இது ஒரு மருந்து பொருளும் கூட. ஜீரண உறுப்புகள் சரியாக வேலை செய்ய வெற்றிலை துணை புரிகிறது. இது தவிர பற்களுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் இதில் அடங்கி இருக்கிறது. வயிற்றில் உள்ள விஷக்கிருமிகளை கொல்லும் தன்மை

வெற்றிலைக்கு உண்டு. நீர்ச்சத்தும் நிரம்பப்பெற்றது. வைட்டமின் சி, கரோட்டீன், புரத சத்தும் நிரம்பியது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப் படுத்தி கெட்டக் கொழுப்பை வெளியேற்றக் கூடியது.

ஆயுர்வேத மருந்துகள் பலவற்றில் வெற்றிலை இடம் பிடித்திருக்கிறது.

தீக்காயம்: வெற்றிலை குளிர்ச்சி யானது. தீக்காயங்கள் உள்ள இடத்தில் வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவி வரலாம். தீக்காய எரிச்சல் நீங்கும். காயமும் விரைவாக ஆறும்.

முடி உதிர்தல்: வெற்றிலையை நன்றாக அரைத்து நல்லெண்ணெய்யுடன் குழைத்து கூந்தல் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்துவிடவும். பின்பு சிறிது நேரம் கழித்து, குளித்து விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.

பொடுகு: வெற்றிலையை அரைத்து அத்துடன் பச்சை கற்பூரம், துளசி இலை சாற்றை கலந்து தலையில் நன்றாக தேய்த்து விடவும். சிறிது நேரம் கழித்து கூந்தலை கழுவி விடலாம். பொடுகு காணாமல் போய்விடும்.

பல் சொத்தை: வெற்றிலையை வெறும் வாயில் மென்று வந்தால் பற்கள், ஈறுகள் பலப்படும். பல் சொத்தையாவதும் தவிர்க்கப்படும்.

துர்நாற்றம்: வாயில் துர்நாற்றம் வீசுவதற்கு வயிற்றில் நுண்கிருமிகள் இருப்பதுதான் காரணம். வெற்றிலையை சாறு எடுத்து பருகினால் அது துர்நாற்றத்திற்கு காரணமான நுண்கிருமிகளை கொன்று நிரந்தர தீர்வளிக்கும்.

முகப்பரு: இரண்டு, மூன்று வெற்றிலையை விழுதாக அரைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி விட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். நாளடைவில் முகப்பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போய்விடும். வெற்றிலை சாறை கொண்டு முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் மீண்டும் வராது.

வியர்வை நாற்றம்: உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தையும் வெற்றிலை நீக்கக்கூடியது. கொதிக்கும் நீரில் வெற்றிலையை கலந்து அந்த சாறை வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்துவிட்டு குளிக்கலாம். வியர்வை நாற்றம் அடியோடு அகலும். அணியும் உடைகளில் படிந்திருக்கும் வியர்வை நாற்றத்தை நீக்குவதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். வெற்றிலை சாறு கலந்திருக்கும் நீரில் ஆடைகளை முக்கி உலர்த்தலாம்.

எரிச்சல்: தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி, எரிச்சல் போன்ற அனைத்திற்கும் சிறந்த மருந்தாக வெற்றிலை விளங்குகிறது. 10 வெற்றிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து விட்டு, சிறிது நேரம் கழித்து குளித்துவிடலாம். குளிக்கும் நீரிலும் இந்த சாற்றை கலந்து கொள்ளலாம். எரிச்சல், அரிப்பு, அலர்ஜி போன்ற சரும பிரச்சினைகள் நீங்கும். இதில் ஆண்டி இன்ப்ளேமேட்ரி, ஆண்டி பேக்டீரியல் போன்ற பண்புகள் உள்ளதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை