சிறப்புக் கட்டுரைகள்

பங்குச்சந்தை துளிகள்

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

* பார்தி இன்ப்ராடெல் நிறுவன பங்கு பற்றிய மதிப்பீட்டை ஜெபரீஸ் நிறுவனம் குறைத்துள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.180-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.246-ல் முடிவுற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 2.37 சதவீத ஏற்றமாகும்.

* ஜூபிலண்ட் புட் ஒர்க்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் கூறி உள்ளது. மேலும், இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.1,700-ல் இருந்து) ரூ.2,060-ஆக உயர்த்தி உள்ளது. மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.1,942.15-ல் நிலைகொண்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 0.51 சதவீத உயர்வாகும்.

* டெக் மகிந்திரா நிறுவன பங்குகளை வாங்கலாம் என ஐ.ஐ.எப்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,000-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 0.36 சதவீதம் அதிகரித்து ரூ.814.05-ஆக இருந்தது.

* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறி இருக்கிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.2,288-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.2,160.15-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.24 சதவீத ஏற்றமாகும்.

* டி.டி.கே. பிரெஸ்டீஜ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் பரிந்துரை செய்கிறது. எனினும், இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.8,165-ல் இருந்து) ரூ.7,200-ஆக குறைத்து இருக்கிறது. மும்பை சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 0.01 சதவீதம் முன்னேறி ரூ.5,887.40-ல் முடிவுற்றது.