சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மாடல் எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.7 அங்குல முழு ஹெச்.டி. ஓலெட் திரையைக் கொண்டது.

ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 865 பிராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது. இதன் பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கொண்ட கேமரா உள்ளது. இது லேசர் ஆட்டோ போகஸ், அல்ட்ரா வைட் ஆங்கிள், டெலி போட்டோ லென்ஸ், ஆப்டிகல் ஜூம் லென்ஸ்களைக் கொண்டது. இதன் முன்பகுதியில் 25 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. டிஸ்பிளேயில் விரல் ரேகை உணர் சென்சார் வசதி உள்ளது.

5000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியோடு 18 வாட் வயர் சார்ஜர் மற்றும் 15 வாட் வயர்லெஸ் சார்ஜரோடு இது வந்துள்ளது. அத்துடன் 5 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை நீடித்திருக்கும். கிரே வண்ணத்தில் வந்துள்ள இதன் விலை ரூ.74,999.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு