செய்திகள்

சபாநாயகர் தனபாலின் உடல்நிலை சீராக உள்ளது: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சபாநாயகர் தனபாலின் உடல்நிலை சீராக உள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை சபாநாயகராக இருக்கும் தனபால், இன்று காலை உயர்ரத்த அழுத்தம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் மருத்துவமனைக்குச் சென்று தனபாலிடம் நலம் விசாரித்தார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், துணை சபாநாயகர் இன்று அவையை வழி நடத்தினார்.

இந்த நிலையில், சபாநாயகர் தனபாலின் உடல்நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனபாலின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கணவர் 'குரங்கு’ என்று அழைத்ததால் மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை

அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?

மத்தியபிரதேசம்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்