தமிழக செய்திகள்

மதுரை: கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த சோதனை நிறைவு - ரூ.165 கோடி பறிமுதல்...!

மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது.

தினத்தந்தி

மதுரை,

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, கடந்த 4 நாட்களாக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்த்தி வந்தனர்.

இந்த நிலையில் மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறையின் சோதனை நிறைவடைந்து உள்ளது. இந்த சோதனையில் ரூ.165 கோடி பணம், 200 கோடி மதிப்பிலான ஆவணங்கள், 14 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்