தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் சாவு

நீடாமங்கலம் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெண் சாவு

தினத்தந்தி

நீடாமங்கலம்:

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு சொந்தமான வயல் நீடாமங்கலம் அருகே நகர் கிராமத்தில் உள்ளது. இவரது வயலில், நேற்று காலை வலங்கைமான் அருகே உள்ள எருமைப்படுகை கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் மனைவி மீனா (வயது 30) என்பவர் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பம்புசெட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக குடத்துடன் சென்ற மீனா அங்கு அறுந்து கிடந்த மின் வயரை மிதித்தார். இதில் மீனா மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நீடாமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்