தமிழக செய்திகள்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 140 தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 140 தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தினத்தந்தி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த மையத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் சந்திரகுமார் (கரூர்), துரை (நாகப்பட்டினம்), வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 5 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 10 முன்னணி தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 140 தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைத்தல், மீட்பு பணிகள், விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்டல், மலையேற்றம், யோகா, தீயணைப்பு கருவிகளை இயக்குதல், மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி, தடை தாண்டுதல், ஏணி ஏறுதல், கயிறு ஏறுதல், நீச்சல், அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு