கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் விண்ணப்பம்

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

தினத்தந்தி

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் நாளில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தினமும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் விண்ணப்பப் பதிவு தொடங்கி 9 நாட்கள் கடந்த நிலையில் நேற்று மாலை வரையிலான புள்ளி விவரங்களின்படி, ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 50 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் 80 ஆயிரத்து 955 பேர் விண்ணப்பத்துக்கான கட்டணத்தையும், அவர்களில் 46 ஆயிரத்து 528 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் உள்ளனர். விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை