தமிழக செய்திகள்

10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

அறந்தாங்கியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

அறந்தாங்கி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதன்பேரில் அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான சித்தாலங்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சக்திவேல் அறந்தாங்கி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு