தமிழக செய்திகள்

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 14-ம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

பின்னர் அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு அங்குள்ள பருத்திதுறை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் பருத்திதுறை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்பேது நீதிபதி கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் வந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற நிபந்தனையுடன் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவர்கள் இன்னும் சில நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி வர உள்ளனர். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகை நாட்டுடைமையாக்க உரிமையாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு