தமிழக செய்திகள்

100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பழனியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

பழனியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் விற்பதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெற்றிச்செல்வி, நகர்நல அலுவலர் மனோஜ்குமார் தலைமையிலான அலுவலர்கள் நகர், அடிவார பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி பிளாஸ்டிக் டீ கப்புகள், பாலித்தீன் பைகள் என மொத்தம் 100 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 65 கடைக்கார்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. வரும் நாட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அந்த கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு