தமிழக செய்திகள்

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மீஞ்சூர் அடுத்த வல்லூரில் தேசிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 யூனிட்டில் தலா 500 வீதம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் முதல் யூனிட்டில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று 3-வது யூனிட்டில் ஏற்பட்ட பாதிப்பால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரு யூனிட்டுகளில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்