தமிழக செய்திகள்

வால்பாறையில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்-அழகான ஆண் குழந்தை பிறந்தது

வால்பாறையில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்- அழகான ஆண் குழந்தை பிறந்தது

தினத்தந்தி

வால்பாறை

வால்பாறை அருகில் உள்ள தோணிமுடி எஸ்டேட் முதல் பிரிவைச் சேர்ந்த வடமாநில பெண் தொழிலாளி அல்கத்திகா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வால்பாறையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தை டிரைவர் அரவிந்த் ஓட்டிக் கொண்டு சென்று தோணிமுடி எஸ்டேட் பகுதியில் பிரசவ வலியில் துடித்த அல்கத்திகாவை ஏற்றிக் கொண்டு வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை வழியில் நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மருத்துவ உதவியாளர் செல்வக்குமார் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தாயையும் குழந்தையையும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்