தமிழக செய்திகள்

தூக்க மாத்திரை கொடுத்து 13-வயது சிறுமி விபசாரத்தில் தள்ளிய கொடுமை...! தாய் உள்பட உறவினர்கள் 8 பேர் கைது

தினமும் தூக்க மாத்திரை கொடுத்து பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மதுரை

மதுரையை சேர்ந்த 13-வயது சிறுமி, தனது பாட்டியுடன் வந்து தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில் தனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே எனது தாயார் என்னை வளர்க்க முடியாமல் தந்தையி வழி பாட்டி பராமரிப்பில் விட்டு சென்றார். நான் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தேன். இந்த நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு என்னை பார்க்க வந்த தாயார் அவருடன் என்னை ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு எனது பெரியம்மா, சித்தி, அவர்களின் மகன் எல்லாம் இருந்தனர்.

அப்போது அவர்கள் எனக்கு தெரியாமல் தூக்க மாத்திரை கொடுத்து, நான் தூங்கிய பிறகு என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் எனது உடலிலும் சிகரெட் சூடு வைத்துள்ளனர். மேலும் புவனேஷ் என்பவன் போலீசில் புகார் செய்தால் சிறுமி மீது ஆசிட் வீசி, கொலை செய்வேன் என்றும், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டினான். பின்னர் நான் அங்கிருந்து அவர்களுக்கு தெரியாமல் தப்பி வந்து பாட்டியிடம் தெரிவித்தேன் என்றார்.

இது குறித்து போலீசார் விசாரித்த போது 13-வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியது உண்மை என்பதும், அதற்கு அவரது தாய் மற்றும் சித்தி, பெரியம்மா உள்பட 8 பேர் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் போக்சே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாய், அவரது சித்தி, பெரியம்மா மற்றும் சிறுமியியை பாலியல் பலாத்காரம் செய்த அருண், புவனேஷ், சேகர், மணிகண்டன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

மேலும் போலீசார் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பணத்திற்காக பெற்ற மகளையே தாய் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு