தமிழக செய்திகள்

குருநாத சுவாமிகளின் 138-வது குரு பூஜை

குருநாத சுவாமிகளின் 138-வது குரு பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் குருநாத சுவாமிகளின் கோவில் உள்ளது. புரட்டாசி பவுர்ணமியையாட்டி குருநாத சுவாமிகளின் 138-வது ஆண்டு குருபூஜை நேற்று நடந்தது. இதையொட்டி பெரிய ஏரிக்கரையில் இருந்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி மற்றும் அலகு காவடியை பக்தர்கள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்