தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 14 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.85 ஆயிரம் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் முள்ளக்காடு ராஜீவ்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தனம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு ராஜீவ்நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 42) மற்றும் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மேற்சொன்ன போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.85 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.