தமிழக செய்திகள்

தூத்துக்குடி வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல்

தூத்துக்குடி வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையே துரைமுத்துவுடன் பதுங்கி இருந்த கூட்டாளிகளான சாமிநாதன், சிவராம லிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர் சுடலைக்கண்ணு ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 3 பேருக்கும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்