தமிழக செய்திகள்

செங்குன்றம் அருகே இ-சேவை மையத்தில் ரூ.15 லட்சம் திருட்டு

செங்குன்றம் அருகே இ-சேவை மையத்தில் ரூ.15 லட்சம் மர்மநபர்கள் திருடி சென்றனர்.

தினத்தந்தி

செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர் எம்.ஏ. கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 35). இவர், அதே பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைத்து இருந்த ரூ.15 லட்சத்தை திருடிச்சென்று விட்டனர். அந்த பணத்தை நிலம் வாங்குவதற்காக சிறுக சிறுக செந்தில்குமார் சேமித்து வைத்து இருந்தார்.

இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்