தமிழக செய்திகள்

கோவை மாவட்டம் சூலூரில் சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது - போலீசார் அதிரடி

கோவை மாவட்டம் சூலூரில், தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூரில், தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

குரும்பபாளையத்தில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தனிப்படை போலீசார், சேவல் சண்டை நடத்திய 15 பேரை கைது செய்தனர்.

மேலும், ஐந்து சேவல்கள், ஆறு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது