தமிழக செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னையில் மட்டும் 23,500 போலீசார் ஈடுபட்டனர். மேலும், வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 18 மத்திய காவல் படையினர், 10 சிறப்பு காவல் படையினர், 3 ஆயிரம் ஊர்காவல் படையினர், 1,800 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊர்காவல் படையினர், 700 ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் என மொத்தம் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தற்போது வாக்கு எண்ணும் மையங்களிலும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்புக்காக வந்திருந்த சுமார் 45-க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவத்தினர் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

அதன்படி, இன்று மாலை 5 மணியளவில் 8 கம்பெனி துணை ராணுவத்தினர், இரவு 10-க்கு மேல் மற்றொரு 8 கம்பெனி துணை ராணுவத்தினர் என சென்டிரலில் இருந்து ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர். மொத்தம் 1,500 துணை ராணுவத்தினர் நேற்று சென்னையில் இருந்து வடமாநிலம் சென்றுள்ளனர். மீதம் உள்ளவர்களும் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு