தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் மதுபோதையில் பஸ்சை வழிமறித்த வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

நாகர்கோவிலில் மதுபோதையில் பஸ்சை வழிமறித்த வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் மதுபோதையில் பஸ்சை வழிமறித்த வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பஸ்சை வழிமறித்த வாலிபர்

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் திடீரென ஒரு பஸ்சின் குறுக்கே சாலையை மறித்து மோட்டார் சைக்கிளுடன் நின்றார். மேலும் அவர் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் செட்டிகுளம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரூ.15 ஆயிரம் அபராதம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் செட்டிகுளம் பகுதிக்கு விரைந்தனர். நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில் அவர் சரக்கல்விளை பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் என்பதும், மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக பஸ் டிரைவர் ஏர்ஹாரன் அடித்துக்கொண்டே இருந்ததால் பஸ்சை தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார்.

பின்னர் அந்த வாலிபர் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், ஓட்டுனர் உரிமம் இல்லாததற்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதத்தை போலீசார் விதித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு