தமிழக செய்திகள்

சேலத்தில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் - 3 பேர் கைது

சேலத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

அதனை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவில் வந்த நபரை கைது செய்தனர். இதே போல் மற்றொரு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்