தமிழக செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 17 பன்றிகள் பிடிபட்டன

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 17 பன்றிகள் பிடிபட்டன

தினத்தந்தி

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 7, 27-வது வார்டுகளில் உள்ள வடக்கு வாசல் மற்றும் இடையர் தெரு பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்தனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் படி தெருக்களில் சுற்றித்திரிந்த பன்றிகளை போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட கோட்ட துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் 17 பன்றிகளை நேற்று பிடித்து அப்புறப்படுத்தினர். மேலும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு இது போன்று பன்றிகள் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு விளைவிக்கும்படி பன்றிகள் மாநகராட்சி எல்லைக்குள் சுற்றித்திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து