தமிழக செய்திகள்

ஈரோடு மாநகரில் ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்

ஈரோடு மாநகரில் ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்

தினத்தந்தி

ஆயுதபூஜையையொட்டி பொதுமக்கள் வீடுகள், வணிக நிறுவனங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு குமலன்குட்டை, செல்வம் நகர், மாணிக்கம்பாளையம், சக்தி நகர், கருங்கல்பாளையம், சோலார், சூளை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பதுங்கி இருந்த 3 அடி நீளம் முதல் 10 அடி நீளம் வரை உள்ள கோதுமை நாகம், சாரை பாம்பு, கண்ணாடி விரியன், கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட 4 வகையான 18 பாம்புகள் ஒரேநாளில் பிடிபட்டுள்ளன.

வீடுகளில் சமையல் அறை, மோட்டார் அறை, ஏ.சி., கட்டுமான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்ட இடம், மெத்தை படிக்கட்டுகள் அடியில், கார் சக்கரம், குடிநீர் குழாய் உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருந்த பாம்புகளை, பாம்புபிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். கடந்த 14 ஆண்டுகளில் 34 ஆயிரத்து 800 பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து இருப்பதாக பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து