தமிழக செய்திகள்

19-ந்தேதி மின்நிறுத்தம்

பந்தநல்லூர், கதிராமங்கலத்தில் 19-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பனந்தாள் அருகே முள்ளுகுடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையங்களில் வருகிற 19-ந்தேதி பராமரிப்பு நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் குறிச்சி, கிழக்காட்டூர், காகிதப்பட்டறை, பந்தநல்லூர், கோணுலாம்பள்ளம், கயலூர், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூர், பட்டவெளி, கீழமனக்குடி, திருக்கோடிகாவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் 19-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT