தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கோவையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை

கோவை பெரிய கடைவீதி போலீசார் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் காந்திநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், செட்டிப்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நவ்சாத் (39), காங்கயம்பாளையம் நேருநகரை சேர்ந்த ஜீவபாரதி (22) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...