தமிழக செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

அஞ்சுகிராமம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடம் நான்கு வழி சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பழவூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 22), கன்னங்குளம் பகுதியை சேர்ந்த ஜெனிஸ் (24) என்பதும், அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன், கஞ்சாவை எடை போட வைத்திருந்த எடை மிஷின், ரூ.5,700, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

===

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு