தமிழக செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய 2½ லட்சம் கனஅடி தண்ணீர்

நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் 2½ லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம் சந்திப்பு பகுதியை தீவாக்கியது. சந்திப்பு, சிந்துபூந்துறை பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை கிராமங்களில் இருந்து படகுகளை லாரிகளில் எடுத்து வந்தனர். மேலும் மீனவர்களும் வரவழைக்கப்பட்டனர். அந்த படகுகள் நெல்லை சந்திப்பு பகுதியில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அவர்கள் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வந்து அண்ணா சிலை அருகே மேட்டு பகுதியில் கொண்டு வந்து விட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த மலைக்கு 3 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை