தமிழக செய்திகள்

கல்பாக்கம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் மேலும் 2 பெண்கள் சாவு - பலி எண்ணிக்கை 4 ஆனது

கல்பாக்கம் அருகே லாரி - கார் மோதிய விபத்தில் மேலும் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆனது.

தினத்தந்தி

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் லியாகத் அலிகான். இவரது மனைவி நூர்ரிஸ்வானா (49). சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர்கள் நூர் ஜெரினா (52), பாத்திமா (72), கவுரிவாக்கம் நூர் ரிகானா (55), இவர்கள் கடந்த 21- ந்தேதி குடும்ப உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரும்பி கொண்டிருந்தனர். கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில், இரவு 10 மணிக்கு கார் கடந்தபோது, எதிரில் புதுச்சேரி நோக்கி சென்ற மீன் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது.

கார் டிரைவர் சபீர் பாஷா மற்றும் நூர் ரிஸ்வானா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நூர் ஜெரினா, பாத்திமா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். நூர்ரிகானாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்