தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

விழுப்புரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

தினத்தந்தி

விழுப்புரம் அருகே உள்ள இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன்(வயது 36). இவர் தனது மோட்டார் சைக்கிளை விழுப்புரம் நகராட்சி பூங்கா நுழைவுவாயில் அருகில் நிறுத்திவிட்டு பூங்காவிற்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவராமன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர். இதேபோல் திண்டிவனம் அருகே எறலிக்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன்(25) என்பவர், விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு மளிகை கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்குள்ள நடனமாடும் குழுவினரை பார்க்கச்சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து