தமிழக செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

வடமதுரை அருகே உள்ள புத்தூர் குளத்துக்கரையில், வடமதுரை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மயானம் அருகே, 2 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனைக்கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்த ராமையா (வயது 52), சின்னன் (30) என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்