தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

போடிமெட்டு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போடிமெட்டு பகுதியில் நேற்று குரங்கணி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் ராஜாகாட்டைச் சேர்ந்த ஷாஜி (வயது 47), வெள்ளத்தூவல் பகுதியை சேர்ந்த பென்னிஜோசப் (52) என்றும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜி, பென்னிஜோசப்பை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 47 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 670-யை போலீசார் பறிமுதல் செய்தனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு