தமிழக செய்திகள்

செல்போன் திருடிய 2 பேர் கைது

செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தினத்தந்தி

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவரும் சங்கரன்கோவிலை சேர்ந்த மதன்குமார் என்பவரும் நேற்று முன்தினம் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி அருகே உள்ள புதிய தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழ் குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் குமாரின் செல்போன் மற்றும் மதன்குமாரின் கைப்பை ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றனராம். இதனை பார்த்த அவர்கள் 2 பேரையும் பிடித்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் அம்பையை சேர்ந்த சுரேஷ் (36), நெல்லை சந்திப்பு தைக்கா தெருவை சேர்ந்த ஹமீது (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்