தமிழக செய்திகள்

விபத்தில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் படுகாயம்

விபத்தில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் சத்யா (வயது 37). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மீனம்பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மீனம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (47) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பெண் போலீஸ் சத்யா மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சத்யா சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சத்யா சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து